×

அறந்தாங்கி அருகே பரபரப்பு திமுக நீர்மோர் பந்தல் தீ வைத்து எரிப்பு

 

அறந்தாங்கி, மே 4: அறந்தாங்கி அருகே கோடைகால நீர் மோர் பந்தலை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட அமரடக்கியில் திமுக மாவட்ட நெசவாளர் அணி சார்பில் கடந்த 1-ந் தேதி கோடைகால நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.

இதையடுத்து நாள்தோறும் பொதுமக்களுக்கு மோர், குடிநீர், சர்பத் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில நேற்று முன்தினம் இரவு இந்த கோடைகால நீர் மோர் பந்தல் தீ பிடித்து எரிந்துள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்தனர். இது குறித்து ஆவுடையார்கோவில் போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அறந்தாங்கி அருகே பரபரப்பு திமுக நீர்மோர் பந்தல் தீ வைத்து எரிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Nemor ,Aranthangi ,Arantangi ,Pudukottai District ,DMK District Weavers Team ,Amarataki ,Auduyarkoil Union ,Nemor Pandal ,
× RELATED மாவட்டம் முழுவதும் திமுக சார்பில் நீர்மோர் பந்தல்கள் திறப்பு